ஆயுதங்களுக்கு
கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு என் உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது
தட்டும் திசையில் மனிதன், நானாக
மட்டுமல்ல கடவுளே ஆனாலும் சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் பேனாவை நம்புகிறேன்.
“எஸ்போஸ்
(சந்திரபோஸ் சுதாகர், 1975 – 2007)
இந்தக் குறிப்புக்களைவிட வேறு எப்படி எஸ் போஸ் என்ற
இலக்கிய செயற்பாட்டாளனை அறிமுகம் செய்து விடமுடியும். ஒரு ஊடகவியலாளனாக, பத்திரிக்கை ஆசிரியராக, சஞ்சிகை நிறுவுனராக, எழுத்தாளானாக , கவிஞனாக, போராளியாக என்று
ஒரு சட்டகத்துக்குள் அடங்காத இளைஞராகவே இருந்த எஸ்போஸ் சிறுகதைகள் கட்டுரைகள் விமரிசனங்கள் நேர்காணல்கள் கவிதை என இலக்கிய செயற்பாட்டின் அனைத்து பக்கங்களிலும் தன் பேனாவினை பதித்துக்கொண்ட போதிலும் கவிதைகளோடு
அதிகம் நெருக்கமானவராவே இருந்திருக்கிறார்.